ரூ.3.47 லட்சம் இழப்பீடு வழங்க ஆட்டோ டிரைவருக்கு கோர்ட்டு உத்தரவு


ரூ.3.47 லட்சம் இழப்பீடு வழங்க ஆட்டோ டிரைவருக்கு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 March 2023 7:30 PM GMT (Updated: 2 March 2023 7:30 PM GMT)
சேலம்

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 2019-ம் ஆண்டு அய்யந்திருமாளிகை அருகே சென்றபோது, மொபட்டில் சென்ற நதியா என்பவர் மீது மோதியுள்ளார். அப்போது, அவருடன் வந்த மகன் விக்ராந்திற்கு காயம் ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த விபத்து தொடர்பாக இழப்பீடு கேட்டு சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நதியா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஆட்டோ டிரைவர் ஜாபர் அலி வைத்திருந்த இன்சூரன்சு ஆவணங்கள் போலியானது என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், நதியாவின் குடும்பத்தினருக்கு விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story