ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 26 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 6:45 PM GMT)

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் பருத்தி ரூ.6 ஆயிரத்து 779-க்கு விலை போனது.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் பருத்தி ரூ.6 ஆயிரத்து 779-க்கு விலை போனது.

பருத்தி ஏலம்

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது செம்பனார்கோவில் பகுதியில் விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில், இணை செயலாளர் சிலம்பரசன் மேற்பார்வையில் ஏலம் நடைபெற்றது.

ரூ.1½ கோடிக்கு...

இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 779-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 845-க்கும், சராசரி விலையாக ரூ.6 ஆயிரத்து 345-க்கும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இதில் மொத்தமாக சுமார் 2 ஆயிரத்து 200 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 65 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 586 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.


Next Story