காவேரிப்பட்டணத்தில்சாலையோரம் ஆண் பிணம்


காவேரிப்பட்டணத்தில்சாலையோரம் ஆண் பிணம்
x
தினத்தந்தி 29 Jun 2023 7:30 PM GMT (Updated: 29 Jun 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

காவேரிப்பட்டணத்தில் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டேம் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சுண்டேகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் சரண்யா காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story