தொடர் கனமழை; 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


தொடர் கனமழை; 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 4 Nov 2023 1:09 AM GMT (Updated: 4 Nov 2023 2:50 AM GMT)

திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி, சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர் கனமழை எதிரொலியாக, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி, சென்னை மற்றும் சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story