கலந்தாய்வு கூட்டம்


கலந்தாய்வு கூட்டம்
x

நுகர்வோர் வாணிப கழக மண்டல அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நுகர்வோர் வாணிப கழக மண்டல அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் விஜயகுமார், துணை மண்டல மேலாளர் கண்ணன், உதவி மேலாளர் மணிபாண்டி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி கூறுகையில், வாணிப கழக கட்டுப்பாட்டில் உள்ள 34 ரேஷன் கடைகளில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறாமல் இருக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


Next Story