மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு


மாணவர் சேர்க்கைக்கு  கலந்தாய்வு
x

மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்குகிறது

சிவகங்கை

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அழகுசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. அதன்படி காலை 9 மணிக்கு விளையாட்டு, என்.சி.சி., முன்னாள் படைவீரரின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அனைத்து அறிவியல் பிரிவு, இளநிலை படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 8-ந் தேதி அனைத்து கலை பிரிவு இளநிலை படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வரக்கூடிய மாணவ, மாணவிகள் பிளஸ்-2 மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், அசல் மற்றும் புகைப்பட நகல்கள் மற்றும் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை கொண்டு வர வேண்டும். இதே போல் சிறப்பு ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தவர்கள் உரிய மூலச்சான்று கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story