காங்கிரஸ் பிரசார நடைபயணம்


காங்கிரஸ் பிரசார நடைபயணம்
x

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் பிரசார நடைபயணம் மேற்கொண்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. காமராஜர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட இந்த பிரசார நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருத்தங்கல் ரோட்டில் முடிந்தது. பயணத்தின் போது தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நடைபயணத்தின் போது மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், நகர தலைவர் சேர்மத்துரை, வட்டார தலைவர்கள் பைபாஸ் வைரகுமார், சங்கர்ராஜ், தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜி.பி.முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மகேஸ்வரி கணேசன், தங்கபாண்டியம்மாள், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story