இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டினர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
மதுரை சேர்மத்தாய் வாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில துறையால் காமராஜர் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. இதில் அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை 3-ம் ஆண்டு மாணவிகள் முத்துலட்சுமி முதல் பரிசும், யமுனா, லோக சவுமியா 2-வது பரிசும், காவியா, திவ்யா ஆகியோர் 3-வது பரிசும் பெற்றனர். மேலும் ஒட்டுமொத்த போட்டிக்கான கேடயத்தையும் வென்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி செயலர் இளங்கோவன், சேர்மன் ராமச்சந்திரன், கல்வியியல் கல்லூரி செயலர் சங்கரநாராயணன், கல்லூரி முதல்வர் கதிர்காமு, இயக்குனர் விக்னேஷ், டீன் தில்லை நடராஜன், நிர்வாகிகள், பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிகளை பாராட்டினர்.
Related Tags :
Next Story