கல்லூரி மாணவர்கள்-இளைஞர்கள் இடையே மோதல்


கல்லூரி மாணவர்கள்-இளைஞர்கள் இடையே மோதல்
x

கல்லூரி மாணவர்கள்-இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், குமுளூரை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நேற்று காலை கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே பிரச்சினை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் உள்ளூர் இளைஞர்கள் 2 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த குமுளூரை சேர்ந்த இளைஞர்கள் 15 பேர் கல்லூரியின் கேண்டினுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கல்லூரியில் இல்லாத காரணத்தால், பேராசிரியர்கள் உடனே சென்று இளைஞர்களிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் அங்குவந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.


Next Story