போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் புகார்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் புகார்
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் புகார் செய்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி. இவருடைய வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்கு முருகானந்தம் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். வீட்டிற்கு கலர் பெயிண்ட் அடிப்பதற்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் பணி முடித்த பின்னர் பேசியபடி பணத்தை கொடுக்கவில்லை எனக்கூறி முருகானந்தம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இந்நிலையில் ரவியுடன், பெயிண்டர் பேசிய உரையாடல் ஆடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story