புகார்பெட்டி


புகார்பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் இருமேனியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிக்குமார், இருமேனி.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் ஊராட்சியில் பேச்சிஊருணி கரையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது இதனால் இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனிமூசா, ராமநாதபுரம்.

கூடுதல் பஸ்கள் தேவை

ராமநாதபுரத்தில் இருந்து பல ஊர்களுக்கும் இயக்கப்படும் டவுன் பஸ்கள் தேவைக்கும் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்களில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் இவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

ரெயில்கள் நின்று செல்லுமா?

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தப்படுவது கிடையாது. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சகாய வினோத், மண்டபம்.

வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி நகர் 4-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?

பரீஸ், ராமநாதபுரம்.



Next Story