புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

விருதுநகர்



தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமுருகன், ஆலங்குளம், விருதுநகர்.

தெரு நாய்களால் ெதால்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்வதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமிநாதன், சிவகாசி, விருதுநகர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் அதிகம் தேங்கி இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்.

கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள இடையங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கண்மாயில் முழுக்கொள்ளளவு நீரை தேக்கி வைக்கி முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இடையங்குளம், விருதுநகர்.

வாருகால் அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணா நகர் 5-வது தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் போதிய வாருகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், கிருஷ்ணன்கோவில், விருதுநகர்


Related Tags :
Next Story