போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு


போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 8 March 2023 6:45 PM GMT)

போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பகீரதநாச்சியப்பன், நூலக ஆய்வாளர் சண்முகசுந்தரம், நூல்சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், மாவட்ட மையநூலகர் தவமணி, எழுத்தாளர் ஈஸ்வரன், கண்காணிப்பாளர் சாமிநாதன் ஆகியோர் பேசினர். விழாவையொட்டி மகளிர் நூலகர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், நூலகர்கள் முத்துக்குமார், கனகராஜ், சாந்தி மற்றும் நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story