இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு


இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
x

தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேதாரண்யம் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக ஊராட்சி மன்றத்தலைவர் ரேவதி பாலகுரு வரவேற்றார். மாவட்ட செயலாளர் சம்பந்தம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருப்பம்புலம், வாய்மேடு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக டாக்டரை நியமிக்க வேண்டும். வாய்மேட்டில் மானங்கொண்டானாற்றில் ஆகாயத்தாமரை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கடினல்வயல் ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story