தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
x

தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரித்தனர். அப்போது அவர், தனது இடம் தொடர்பாக, சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் தீக்குளிக்க முயன்றதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story