மேல்முறையீடு செய்தவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கும் பணிகள் தொடக்கம்


மேல்முறையீடு செய்தவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கும் பணிகள் தொடக்கம்
x

தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

சென்னை,

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்ததிட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

மேலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வரவு வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் 2ம் கட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கிறார்.


Next Story