கல்லூரி மாணவர்கள் தர்ணா


கல்லூரி மாணவர்கள் தர்ணா
x

கல்லூரி மாணவர்கள் தர்ணா

மயிலாடுதுறை

குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு புதிய கட்டிடம், குடிநீர் வசதி, கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரக்கோரி கடந்த வாரம் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் செய்தனர். நேற்றுமுன்தினம் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று கல்லூரியில் அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் எனவும், கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story