கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள பூஞ்சோலைபட்டியை சேர்ந்தவர் தங்கவேல்-ராஜலட்சுமி. இந்த தம்பதியின் மகள் மோகனா (வயது 19). இவர் தரகம்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் மோகனா இரவில் தனது வீட்டில் பெற்றோருடன் தூங்கினார். பின்னர் மறுநாள் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, மோகனாவை காணவில்லை. இதையடுத்்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராஜலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story