கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயம் ஆனார்

கரூர்

தோகைமலை அருகே புழுதேரி ஊராட்சி சீத்தப்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் ரம்யா (வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் ரம்யா வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ரம்யா கிடைக்கவில்லை. இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து, மாயமான மாணவியை தேடி வருகிறார்.


Next Story