கல்லூரி பஸ்-மினி லாரி மோதல்; மாணவர்கள் உள்பட 25 பேர் காயம்


தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

கல்லூரி பஸ்சும், மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ, மாணவிகள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை

கல்லூரி பஸ்-மினி லாரி

சிவகங்கை அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான ஒரு பஸ்சில் திருக்கோஷ்டியூர் பகுதியில் இருந்து மாணவ-மாணவிகளை அழைத்து வருவது வழக்கம்.

நேற்று வழக்கம்போல் அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி அந்த பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்சை இளங்கோ என்பவர் ஓட்டினார்.

சிவகங்கையை அடுத்த கரும்பாவூர் விலக்கு அருகே வந்தபோது, அந்த பகுதியில் ஓர் மினி லாரி வந்தது. திடீரென அந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ் மீது மோதியது. இதில் பஸ்சும், மினி லாரியும் சேதம் அடைந்தன.

25 பேர் காயம்

இந்த விபத்தில் கல்லூரி பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களை எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story