செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் குளம் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் குளம் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 90 லட்சம் செலவில் காந்திநகர் வண்ணான் குளம் சீரமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி, மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 18 லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மதுராந்தகம் நகரமன்றத் தலைவர் மலர்விழி குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story