கோவை: தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை


கோவை: தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
x

கோவை விளாங்குறிச்சி அருகே தனியார் நிறுவனத்தில் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை:

கோவை விளாங்குறிச்சி மூகாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (54). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தீபாவளி அன்று காலை குடும்பத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்ப வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகசுந்தரம் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story