சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தமிழக தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என்று பிரித்து பார்த்து மோதலை உருவாக்கும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை மாற்றக்கோரி திருச்சியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story