பொதுமக்கள் திடீர் சாலைமறியல்


பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:45 PM GMT)

செங்கோட்டை அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக தேன்பொத்தை மெயின் ரோட்டின் வழியாக இரவில் சிலர் ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் அவதூறாக பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேன்பொத்தை மெயின் ரோட்டில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story