ஒரத்தநாட்டில் நகைக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலைமறியல்


ஒரத்தநாட்டில் நகைக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலைமறியல்
x

ஒரத்தநாட்டில் நகைக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலைமறியல்

தஞ்சாவூர்

நகை-பணத்தை மோசடி செய்து விட்டதாக கூறி பொதுமக்கள் நகைக்கடையினை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேமிப்பு திட்டத்தில் நகை வணிகம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தவணை முறையில் பணம் செலுத்தினால் செய்கூலி சேதாரம் இன்றி சலுகை அடிப்படையில் நகை வழங்கப்படும் என்றும், மேலும் வட்டி இல்லா நகை கடன் வழங்கு திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை சம்பந்தப்பட்ட நகைக்கடை நிர்வாகம் அறிவித்ததின் பேரில், இந்தத்திட்டத்தில் பெரும்பாலான கிராமபுற பொதுமக்கள் பல லட்சம் பணம் செலுத்தியுள்ளனர்.

நகையினை அடகு வைத்துள்ளனர். ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கும், நகையினை அடகு வைத்தவர்களுக்கும் நகையினை வழங்காமல் நகை கடை நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடையின் உரிமையாளரும் தலைமறைவாகி விட்டதாக தெரிய வருகிறது. இதனால் பணம் செலுத்திய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் நேற்று மாலை சம்பந்தப்பட்ட நகை கடையை முற்றுகையிட்டனர்.

சாலை மறியல்

அதனை தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தருமாறும், அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று ஒரத்தநாட்டில் பரபரப்பு நிலவியது.


Next Story