குரூப்-2 தேர்வு எழுதிய கர்ப்பிணிக்கு பிரசவ வலி


குரூப்-2 தேர்வு எழுதிய கர்ப்பிணிக்கு பிரசவ வலி
x

குரூப்-2 தேர்வு எழுதிய கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனியை சேர்ந்தவர் காசிராஜன். ேபாலீஸ்காரர். இவரது மனைவி அனிதா(வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த குரூப்-2 தேர்வு மையத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த மையத்தின் கண்காணிப்பாளர், அனிதாவை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story