27-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


27-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார்.

சென்னை,

நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். பிரதமர் மோடி, 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவாகும்.

இந்த நிலையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி டெல்லி செல்கிறார்.

நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்கும் முதல்-அமைச்சர், மத்திய அரசின் நிலுவைத் தொகை, நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story