சிதம்பரம் கனகசபை விவகாரம்; விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு


சிதம்பரம் கனகசபை விவகாரம்; விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
x

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள் கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படாததால், வீதிமீறல்கள் இருந்தால் அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.




Next Story