சென்னை: மின்சார ரெயிலில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் அட்டகாசம்...!


சென்னை: மின்சார ரெயிலில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் அட்டகாசம்...!
x

சென்னையில் மின்சார ரெயில் நடைமேடையில் பட்டாக்கத்திகளை உரசியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்களால் பரபரப்பு.

சென்னை,

சென்னையில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம், ஏளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கிராமப்புற மாணவர்கள் சென்னையில் பல்வேறு கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இதனால் காலையில் செல்லும் ரெயிலில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்பும் மாணவர்கள் ரெயிலில் செல்லும் போது யார் பெரியவர் என்ற மோதல் ஏற்படுகிறது. அப்போது கல்லூரி மாணவருடன் சில இளைஞர்களும் சேர்ந்த பட்டாக்கத்தியுடன் ரெயிலில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் அத்திப்பட்டு, புதுநகர் ரெயில் நிலையங்களில் ஒரு மின்சார ரெயிலில் சில மாணவர்கள் பட்டாக் கத்தியை நடைமேடைகளில் உரசிக்கொண்டு பாடல் பாடி வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story