சென்னை: ரத்த‌தான முகாமை தொடங்கிவைத்த மேயர்- ஆர்வமுடன் ரத்த‌தானம் வழங்கிய இளைஞர்கள்


சென்னை: ரத்த‌தான முகாமை தொடங்கிவைத்த மேயர்- ஆர்வமுடன் ரத்த‌தானம் வழங்கிய இளைஞர்கள்
x

இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ரத்த தானம் வழங்கினார்.

சென்னை,

சென்னை ராயபுரத்தில் ஜோடியாக் நண்பர்கள் குழு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில், சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் வடசென்னை திமுக பொறுப்பாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினார். ரத்ததானம் வழங்கிய இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.


Next Story