சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து


சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து
x

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 233 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதல்-அமைச்சர் செல்லும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக எழிலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார்.


Next Story