காசோலை மோசடி வழக்கு - சினிமா தயாரிப்பாளருக்கு ஓராண்டு சிறை -மதுரை கோர்ட்டு உத்தரவு


காசோலை மோசடி வழக்கு - சினிமா தயாரிப்பாளருக்கு ஓராண்டு சிறை -மதுரை கோர்ட்டு உத்தரவு
x

காசோலை மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் சசி புரொடக்சன் என்ற சினிமாப்படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கும், மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தொழில் நிமித்தமாக ரூ.14 லட்சத்தை 2013-ம் ஆண்டில் ஆறுமுகத்திடம், சக்கரவர்த்தி கொடுத்தார்.

உரிய நேரத்தில் திருப்பி செலுத்தும் வகையில் காசோலையை வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இதுகுறித்து சக்கரவர்த்தி, மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆறுமுகத்துக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் கடன் தொகை ரூ.14 லட்சத்தை 2 மாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி சந்தனகுமார் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story