தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரவு நேரங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 6 செ.மீட்டர், சோழிங்கநல்லூரில் 5 செ.மீட்டர் மழை பதிவானது.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 14ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story