அதிகாலை 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்


அதிகாலை 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
x
தினத்தந்தி 17 Dec 2023 9:13 PM GMT (Updated: 18 Dec 2023 2:49 AM GMT)

கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story