புகை மண்டலமாக காட்சி அளித்த சாக்கோட்டை சாலை


புகை மண்டலமாக காட்சி அளித்த சாக்கோட்டை சாலை
x

புகை மண்டலமாக காட்சி அளித்த சாக்கோட்டை சாலை

தஞ்சாவூர்

கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்ரஹாரம் பகுதியில் இருந்து திருவாரூர் சாலைக்கு செல்லும் சாலையில் சாக்கோட்டை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த சாலையின் வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த வழியாக சென்று வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுப்பொருட்கள் குவிந்து கிடக்கிறது. இவ்வாறு குவிந்து காணப்படும் குப்பைகள் காற்று வீசும் நேரத்தில் பறந்து செல்கிறது. இதனால் சாலைகளிலும், வாகனங்களில் செல்வோர் மீதும் குப்பைகள் வந்து விழுகிறது. இதனால் ஒரு சிலர் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் அந்த சாலையில் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. அடிக்கடி இதுபோன்று அருகருகே குப்பைகளை குவித்து வைத்து கொளுத்துவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. நேற்று இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. சாலையே தெரியாத அளவிற்கு புகை காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். புகை மூட்டம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story