மகளிர் தின விழா கொண்டாட்டம்


மகளிர் தின விழா கொண்டாட்டம்
x

சுந்தரப்பெருமாள் கோவிலில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் ஊராட்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் குழு கூட்டமைப்பு தலைவர் தமிழரசி வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், இந்தியன் வங்கி மேலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கும்பகோணம் ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், ஒன்றிய ஆணையர் பூங்குழலி ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக குழுவில் உள்ளவர்களுக்கான பேச்சுப்போட்டி, மாறுவேட போட்டி, போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசிரியர் கோவிந்தராஜ், வட்டார இயக்க மேலாளர் விஜி, வட்டார ஒருங்கிணைப்பாளர் லதா, மகளிர் குழு பொருளாளர் வாசுகி உள்பட மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர். முடிவில் குழு கூட்டமைப்பு செயலாளர் சந்திரா நன்றி கூறினார்.


Next Story