அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:45 PM GMT)

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதையொட்டி சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு மகளிர் அணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி பரமசிவன், நகர அவைத்தலைவர் வேலுச்சாமி, நகர பொருளாளர் அய்யப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story