பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை


பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை
x

பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுகல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 14-ம் தேதி ஆலோசனை நடைபெற்றது.

அப்போது பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுகல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பிற்பகல் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story