அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு: பாஜகவினர் 6 பேருக்கு ஜாமீன்..!


அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு: பாஜகவினர் 6 பேருக்கு ஜாமீன்..!
x

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 6 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் பூத உடலுக்கு கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த குமார், பாலா, கோபிநாத், ஜெயகிருஷ்ணன், கோபிநாத், முகமது யாகூப், ஜெயவேல், பாஜக மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்கள் சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து இவர்கள் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு இன்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும், குமார் உட்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

மேலும் தனலெட்சுமி உட்பட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளை (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story