தர்மபுரியில்சீமானின் உருவ பொம்மையை எரித்த 50 பேர் மீது வழக்கு


தர்மபுரியில்சீமானின் உருவ பொம்மையை எரித்த 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 March 2023 7:00 PM GMT (Updated: 7 March 2023 7:01 PM GMT)
தர்மபுரி

ஆதித்தமிழர் பேரவை சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அருந்ததியர் சமூகத்தினரை தரக்குறைவாக பேசியதாக சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது சிலர் திடீரென சீமானின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். அவர்களை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 10 பெண்கள் உள்பட 50 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story