கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி
x

குலசேகரம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டெம்போ டிரைவர் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டெம்போ டிரைவர் பரிதாபமாக பலியானார்.

டெம்போ டிரைவர்

பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், சிவஜித் என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்

குலசேகரம் அருகே திருநந்திக்கரை சேனங்கோடு பகுதியில் சென்றபோது, எதிரே பேச்சிப்பாறையில் இருந்து குலசேகரம் நோக்கி வந்த ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் ராஜேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார்சைக்கிள்-கார் மோதிய விபத்தில் டெம்போ டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story