கார்-மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு; 3 பேர் கைது


கார்-மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு; 3 பேர் கைது
x

ராதாபுரம் அருகே கார்-மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள்களுக்கும், அருகில் உள்ள அருண்குமார் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளுக்கும் மர்மநபர்கள் தீவைத்து சென்றனர்.

இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக காரியாகுளத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் ஸ்ரீதேவ் வசந்த், நெடுவாலியை சேர்ந்த கணேஷ் பிரபு ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story