கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்


கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்
x

கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்

திருவாரூர்

காரைக்கால் மாவட்டம் முக்குலத்து தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது53). இவரும், இவரது மனைவி சாவித்திரியும் காரில் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு தனது உறவினர் வீட்டில் நடக்கும் கறி விருந்துக்கு சென்றனர். கார்த்திகேயன் காரை ஓட்டினார். திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது நன்னிலம் அருகே காக்கா கோட்டூர் என்ற இடத்தில் சென்ற போது, நிலைதடுமாறி எதிரே திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த தனியார் பஸ் மீது கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 2 பேரும், பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story