ராமநாதபுரத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது


ராமநாதபுரத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 2 March 2023 6:46 PM GMT)

ராமநாதபுரத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம்அடைந்த போலீசார் மோட்டார்சைக்கிளை சோதனை செய்த போது அதில் 150 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா வைத்திருந்ததாக கீழக்கரை அருகே உள்ள இலங்காமணி பகுதியை சேர்ந்த களஞ்சியம் (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story