அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம்


அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம்
x

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பகுதி, ஓம்காளியம்மன் கோவில் பகுதி, காந்தி சிலை பகுதி ஆகிய இடங்களில் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பேசினார்.

இந்த பிரசாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் சரஸ்வதி, நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் வேதாந்தம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story