ரூ.1500 கடனுக்காக வாலிபர் வெட்டிக்கொலை


ரூ.1500 கடனுக்காக வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 16 April 2023 6:45 PM GMT (Updated: 16 April 2023 6:46 PM GMT)

சாயல்குடி அருகே ரூ.1500 கடனுக்காக வாலிபரை வெட்டிக்கொன்ற அவரது சித்தப்பா கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

சாயல்குடி அருகே ரூ.1500 கடனுக்காக வாலிபரை வெட்டிக்கொன்ற அவரது சித்தப்பா கைது செய்யப்பட்டார்.

பன்றி விற்பனை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைகிணறு பகுதியை சேர்ந்தவர் சேசுமணி (வயது 45). இவருடைய மகன் சவரிமுத்து(19). இவர் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். சேசுமணியின் தம்பி மாரிமுத்து(38). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து தனது அண்ணன் சேசுமணியிடம் பன்றி விற்பனை செய்துள்ளார்.

அதற்கு ரூ.2 ஆயிரத்தை ேசசுமணி, மாரிமுத்துவிடம் முதலில் கொடுத்துள்ளார். மீதம் ரூ.1,500 கொடுக்க வேண்டியது இருந்ததாம். இது தொடர்பாக அவர் சேசுமணியிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி அருகே உள்ள சாயல்குடி-தரைக்குடி சாலையில் பன்றி விற்றது தொடர்பான மீதி பணத்தை அண்ணன் மகனான சவரிமுத்துவிடம், மாரிமுத்து கேட்டுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சவரிமுத்துவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாயல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சவரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாயல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ேமலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

ரூ.1500-க்காக தனது அண்ணன் மகனையே சித்தப்பா வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story