கோவிலுக்கு தீவைப்பு
பணகுடியில் பழமையான கோவிலுக்கு மர்மநபர்கள் தீவைத்து சென்று உள்ளனர்.
பணகுடி:
பணகுடி அழகிய நம்பியாபுரத்தில் மிகவும் பழமைவாய்ந்த மயான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு இருந்தது. நேற்று மாலை மர்மநபர்கள் அந்த மேற்கூரைக்கு தீவைத்து சென்றுவிட்டனர். இதில் கூரை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் கல்லால் ஆன அம்மன் சிலை வெப்பத்தால் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் அங்கிருந்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire