மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

பெருமருதூர் கிராமத்தில் மாட்டு வண்டி எல்ைக பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்கை பந்தயம் 3-ந் தேதி 2 பிரிவுகளாக நடைபெற்றது.

நேற்று காலை பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பரிசு

பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 104 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் 3 மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், கொடி பரிசுகள் வழங்கப்பட்டன.

பந்தயத்திற்கான ஏற்பாடுகளை பெருமருதூர் கிராமத்தார்கள் செய்திருந்தனர். பந்தயத்தை காண திரளானவர்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.


Next Story