புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர்


புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர்
x

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(புதன்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும். ஆனால் கடந்த பல வருடங்களாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகே முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் முடிய 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(புதன்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காலை 9.25 மணிக்கு சட்டசபைக்கு வருகிறார். அவருக்கு போலீசார் மரியாதை அளிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து சபாநாயகர் செல்வம் அவரை கூட்ட அரங்கிற்கு அழைத்து செல்கிறார்.

இந்தநிலையில் ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் முதல்முறையாக முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசியுள்ளார்.

ஓரிரு நாட்களில் பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்தால் நடப்பு கூட்டத்தொடரிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இல்லாவிட்டால் ஓரிரு நாட்களில் நிறைவு செய்யப்பட்டு, பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்ததும் மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம்


Next Story