பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா
x

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி

பி.எஸ்.என்.எல். எம்பிளாயீஸ் யூனியன் திருச்சி தொலைதொடர்பு மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். எம்பிளாயீஸ் யூனியன் மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் ஜான் பாஷா, சுந்தரராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் ஜி சுந்தர்ராஜ், சின்னையன், முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வைத்தனர். போராட்டத்தின்போது, ஒப்பந்த பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் லிப்ட் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story